ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் சேரான் கோட்டை கடல் பகுதியில் கரை ஒதுங்கிய கஞ்சா பார்சல்களை போலீசார் கைப்பற்றினர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் கரை ஒதுங்கிய தலா 2 கிலோ எடையுள்ள 4 கஞ்சா பார் சல்களை துறைமுகம் போ லீசார் கைப்பற்றினர். இதுகுறித்து மீனவர்களிடம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்றும் பத்து கஞ்சா பார்சல்கள் கரை ஒதுங்கின. ராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் நேற்றுகாலை கஞ்சா பார்சல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.