சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவதால் அடுத்த 3 மாதங்களுக்கு தற்காலிமாக செயல்படாது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள 4 சக்கர வாகன நிறுத்தும் பகுதி, பயணிகளின் வசதி மற்றும் பார்க்கிங் பகுதிகள் புதுப்பிக்கப்படவுள்ளது. இதனால், இங்குள்ள 4 சக்கர வாகன நிறுத்தும் பகுதி வரும் 24ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது.