சென்னை: இன்று நடைபெற இருந்த குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 18ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் இன்று நடைபெற இருந்த குறைதீர் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு அடுத்த வாரம் 18ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.