துருக்கி, சிரியாவில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவின் பணி உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறனுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான தேசிய தளம் (NPDRR) என்ற பெயரில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்கள் நடத்தப்படுகிறது. 3-வது ஆண்டாக நடைபெறும் இந்த அமர்வில், இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, பேரிடர் மேலாண்மையை மனதில் கொண்டு புதிய வழிகாட்டுதல் உருவாக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பேரிடர் மேலாண்மை நிர்வாகத்தை வலுப்படுத்த வேண்டும். துருக்கி, சிரியாவில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவின் பணி உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது.

தொழில்நுட்பத் திறனை இந்தியா அதிகரித்துள்ளது பேரிடர்களில் பலரின் உயிரை காப்பாற்ற உதவியது. இளைஞர்களுக்கு ராணுவ வீரர்களுடன் இணைந்து பேரிடர் மேலாண்மையில் திறம்பட பயிற்சியளிக்க வேண்டும். இனி அவ்வாறு இருக்க முடியாது.

புதிய கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கும் போது, பேரிடர் மேலாண்மையை கருத்தில் கொண்டு புதிய வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். மொத்த அமைப்புகளையும் மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது. எனவும் கூறியுள்ளார்.

Related Stories: