சென்னை: காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை என்று ஈ.வி.ேக.எஸ்.இளங்கோவன் கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் எம்எல்ஏவாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: எனது பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து எல்லோரும் கலந்து கொண்டார்கள். காங்கிரஸ் கொறடா விஜயதரணிக்கு தனியாக ஒரு அழைப்பிதழ் அனுப்பி இருக்க வேண்டும். நான் தவறு செய்துவிட்டேன். கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து அதற்கான வருத்தத்தையும் தெரிவித்து, அடுத்தமுறை மீண்டும் பதவியேற்கும் சந்தர்ப்பம் வந்தால் அவரை தனியாக சென்று கூப்பிடுவேன்.