திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கண்டிகையில் கன்டெய்னர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கண்டிகையில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கன்டெய்னர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கண்டிகை பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பாஜ மாவட்ட தலைமை அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. காணொளி காட்சி மூலம் இந்த கட்டிடம் இன்று திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பாஜ அலுவலகத்தின் அருகே நள்ளிரவில் சாலையோரரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்ததும் கடும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் அணைக்க முற்பட்டனர்.

இதற்கிடையில் தகவலறிந்து மணவாளநகர் போலீசார் மற்றும் திருவூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் லாரி முழுவதும் எரிந்து சேதமானது. போலீசார் வழக்கு பதிந்து இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்ததா அல்லது மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினார்களா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: