சென்னை: சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.11.03.2023 (சனிக்கிழமை) அன்று சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு திங்கள் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படும்.
