ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் தாமதப்படுத்தியதற்கான காரணம் தெரியவில்லை: சபாநாயகர் அப்பாவு விளக்கம்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் தாமதப்படுத்தியதற்கான காரணம் தெரியவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பியது குறித்து சபாநாயகர் பேட்டியளித்தார். 2022 அக்டோபர் 1ல் தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அவசர சட்டத்துக்கும், சட்ட மசோதாவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. காலம் தாழ்த்தப்பட்டு கடைசியாக ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது என்று சபாநாயகர் கூறினார்.

Related Stories: