புதுக்கோட்டை : இனி வரும் காலங்களில் விண்வெளி ஆய்விற்காக நிலவுக்கோ, செவ்வாய்க்கோ செல்ல வேண்டுமானால் பல நாடுகள் இணைந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மயில்சாமி அண்ணாதுரை விருப்பம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வடக்காட்டில் தாய், தமிழ் மழலையர் பள்ளியில் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய விண்வெளி ஆய்வு நிலைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, குழந்தைகள் தாய்மொழியில் கல்வி கற்பது தான் அறிவியல்ப்பூர்வமாக சிறந்தது என்று குறிப்பிட்டார்.