மொத்தம் 2.39 கிலோமீட்டர் பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. இதில் 1400 மீட்டர் பணிகள் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக சாலையில் பணிகள் ஓரிரு நாளில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான மேன்ஹோல்கள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையில் ஓரிரு நாட்களில் பள்ளம் தோண்டும் பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் போக்குவரத்து அந்த பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சியில் 35 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் 18 வார்டுகளில் முழுமையாகவும், 17 வார்டுகளில் பகுதி வாரியாகவும் பணிகள் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து டெரிக் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை கலெக்டர் அலுவலக சாலையில் பாதாள சாக்கடை பணிகளை தொடங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சாலைகளில் பள்ளங்கள் தோண்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பிரதான சாலை என்பதால் பகுதி பகுதியாக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகள் தொடக்கம்: கலெக்டர் அலுவலக சாலையில் இன்று போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.