சென்னை: சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறியதாவது: ஆளுநர் தரப்பில் இது முதல் நடவடிக்கையாக இருந்தால் எதோ தவறு நடந்தாக கூறலாம், ஆளுநரின் தொடர்ச்சியான இது போன்ற அணுகுமுறை தவறானது. நீட் மசோதா 2வது முறையாக திருப்பி அனுப்பட்டு, தற்போது குடியரசு தலைவரிடம் உள்ளது. சட்ட காரணங்களுக்காக திருப்பி அனுப்பலாம் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திருப்பி அனுப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை வழங்குவதற்கு 4 மாதங்கள் எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை ஒரு இரு வாரத்தில் செய்திருக்கலாம். இது போன்ற முக்கியமான சட்டங்களை திருப்பி அனுப்புவது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்கப்பதாகவே தெரிகிறது. மசோதா அனுப்பிய அதே பிரதி முன்னதாக அவசர சட்டமாக அனுப்பட்ட போது அதற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர். அதே சரத்துகள் உடைய மசோதாவுக்கு ஏன் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. வேண்டுமென்றே ஆளுநர் தாமதப்படுத்துகிறார்.