திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான தடை மசோதாவை கவர்னர் மீண்டும் திருப்பி அனுப்பிய செயல் அராஜகமானது. ஜனநாயகத்திற்கு எதிரானது. இதுவரை 44 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தனர். பல லட்சங்களையும், கோடிகளையும் இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் சொத்துக்கள் இழந்து தவித்து வருகின்றனர். தமிழக அரசு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி தமிழக மக்களின் பணம் இப்படி கொள்ளைபோவதை தடுக்க மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது.