சென்னை: தமிழ்நாடு வயது வந்தோர் கல்வி இயக்குநர் குப்புசாமி கூறியதாவது: அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு 14வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதறிவு கற்பிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ெதாடங்கி வைத்தார்.