புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு தியான அறை வழங்க திகார் சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அம்மாநில முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை வருகிற 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக திகார் சிறையில் தியான அறை ஒதுக்கும்படியும் சிசோடியா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.