முற்றுகிறது அதிமுக - பாஜக மோதல்.! மேலும் 2 பாஜக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

சென்னை: மேலும் 2 பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் லதா, தாம்பரம் ஒன்றிய தலைவர் வைதேகி ஆகியோர் சென்னையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கடந்த சில நாட்களாக பாஜகவில் இருந்து விலகிய சில நிர்வாகிகள், அதிமுகவில் இணைந்தனர்.

அந்த வகையில், தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகிய திலிப் கண்ணன், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று அதிகாவில் இணைந்தார். அதேபோல், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருந்தார். பாஜக அறிவுசார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணனும் அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில், தற்போது, பாஜகவில் இருந்து மேலும் 2 நிர்வாகிகள் சென்னையில் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் லதா, ஒன்றியத்தலைவர் வைதேகி ஆகியோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருவதால் அதிமுக-பாஜக இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: