சென்னை: சென்னை பெரியமேட்டில் 2007ம் ஆண்டு க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 13 பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் வெடிகுண்டுகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் 7.5 டன் அளவுக்கு இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 13 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.