காஞ்சிபுரம்: கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் மகாசக்தி பீடங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் இருந்து வருகிறது. இக்கோயிலை தரிசனம் செய்ய நாள் தோறும் பல்வேறு மாநில பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் என வருகை புரிந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, மாசி மக பிரம்மோற்சவ விழா, கடந்த 10 தினங்களாக கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் காலை, மாலை இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் காமாட்சி அம்மன் லட்சுமி சரஸ்வதியுடன் வந்து, 4 ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.