திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருத்தணி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் திராவிட பக்தன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, திருத்தணி எம்.பூபதி முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திருத்தணி சந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் இலவச திருமணம் செய்து வைத்தல், பிறந்தநாளை மேற்கு மாவட்டம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடுதல், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் கடுமையாக உழைத்த ஒன்றிய, நகர, பேரூர், மாநில, மாவட்ட மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தும் நெசவாளர்களுக்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் வழங்கியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் திருவள்ளூர் நகரத்தில், 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், மகாலிங்கம், கிருஷ்ணன், ஆர்த்தி ரவி, சீனிவாசன், திருத்தணி நகர செயலாளர் வினோத்குமார், திருத்தணி பூக்கடை கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: