முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியத்தில் 18 இடத்தில் ஏழைகளுக்கு அன்னதானம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே.ஆனந்தகுமார்   வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் ஏற்பாட்டில் நாளை காலை 10 மணிக்கு தொடர் நிகழ்ச்சி நடக்கிறது. கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியத்தில் புதுவாயில், பெருவாயில், கீழ்முதலம்பேடு, புதுகும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 18 இடங்களில் கொடியேற்றியும், அன்னதானம் வழங்கியும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் பேனா, பென்சில்  வழங்கும் நிகழ்ச்சி  நடக்கிறது.

இதற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகிக்கிறார். உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இதில், மாநில நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கவுன்சிலர், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், அனைத்து ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மகளிரணி, இளைஞரணி, மாணவரணி, விவசாயிகள் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: