சென்னை: பாரத மக்கள் கழக தலைவர் வி.பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது. கல்வி, மருத்துவம், தொழில் நுட்பம் என பல்வேறு துறைகளில் முன்னோடியாக திகழும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறம்பட செயலாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, வெறுப்பரசியலை நடத்தும் விதமாகவும், சிறந்த நிர்வாகத்தினை சீர்குலைக்கும் எண்ணத்திலும் பாஜகவினர் சில செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவின.