பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

திருவள்ளூர்: பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், கண்ணப்பாளையம் கிராமத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய, நகர செயலாளர்கள் டி.தேசிங்கு, ஜி.ஆர்.திருமலை, தி.வே.முனுசாமி, சேர்மன்கள் காஞ்சனா சுதாகர், யு.வடிவேல், துணை சேர்மன் பரமேஸ்வரி கந்தன், ஜே.மகாதேவன், ஜி.தர், ஒன்றிய நிர்வாகிகள் டி.அண்ணாமலை, ஏ.ஜனார்த்தனன், எம்.இளையான், எஸ்.புகழேந்தி, ஏ.ஆர்.பாஸ்கர், சுமதி குமார், ஆர்.பிரபாகரன், வி.பி.பிரகாஷ், எம்.ராஜாராமன் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.முத்தமிழ்செல்வன், வி.குமார், எம்.கே.ராதா, மே.ம.முத்து, எம்.அருணாச்சலம், எம்.மணிகண்டன், பி.மோகன்தாஸ், ஜி.சத்தியமூர்த்தி, லோகேஸ்வரி டில்லிபாபு, தேவி நித்யானந்தம் ஆகியோர் வரவேற்று பேசினர்.

விழாவில் மாவட்ட செயலாளரும் பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தலைமைக்கழக பேச்சாளர் ஈரோடு இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கே.ஜே.ரமேஷ் ஆகியோரும் பேசினர். விழாவில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் க.பிரபு கஜேந்திரன், ம.ராஜி, வி.ஜே.சீனிவாசன், காயத்ரி தரன், பா.நரேஷ்குமார், கு.விமல்வர்ஷன், மாநகர, ஒன்றிய செயலாளர்கள் சன் பிரகாஷ், ஆர்.ஜெயசீலன், டி.ராமகிருஷ்ணன்,  சே.பிரேம் ஆனந்த், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் ஏ.ஜி.ரவி, சங்கீதா சீனிவாசன், டி.குமரேசன், சாந்தி ஜனார்த்தனன், எம்.ராம்பாபு, சுரேஷ், பரிமேலழகர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கிளை செயலாளர் ஜி.வெங்கடேசன் நன்றி கூறினார்.

Related Stories: