திருவள்ளூர்: பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், கண்ணப்பாளையம் கிராமத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய, நகர செயலாளர்கள் டி.தேசிங்கு, ஜி.ஆர்.திருமலை, தி.வே.முனுசாமி, சேர்மன்கள் காஞ்சனா சுதாகர், யு.வடிவேல், துணை சேர்மன் பரமேஸ்வரி கந்தன், ஜே.மகாதேவன், ஜி.தர், ஒன்றிய நிர்வாகிகள் டி.அண்ணாமலை, ஏ.ஜனார்த்தனன், எம்.இளையான், எஸ்.புகழேந்தி, ஏ.ஆர்.பாஸ்கர், சுமதி குமார், ஆர்.பிரபாகரன், வி.பி.பிரகாஷ், எம்.ராஜாராமன் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.முத்தமிழ்செல்வன், வி.குமார், எம்.கே.ராதா, மே.ம.முத்து, எம்.அருணாச்சலம், எம்.மணிகண்டன், பி.மோகன்தாஸ், ஜி.சத்தியமூர்த்தி, லோகேஸ்வரி டில்லிபாபு, தேவி நித்யானந்தம் ஆகியோர் வரவேற்று பேசினர்.