சென்னை: சென்னை சிவில் இன்ஜினியரிங் சங்கத்தினர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை நேற்று சந்தித்தனர். இதுகுறித்து, சங்க தலைவர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது: கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ பரப்பப்படுவது வடமாநிலங்களில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. ஹோலி பண்டிகை காலமாக இருந்தாலும் அதையும் தாண்டி 70% முதல் 90% வரை வட மாநிலத்தவர் வெளியேறி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கட்டிட தொழிலாளர்கள் தேவை தமிழ்நாட்டிற்கு அதிகமாக இருக்கிறது.
