சென்னை: ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவியை கடத்திச் சென்று, பாலியல் வன்புணர்வு தாக்குதல் நடத்திய சம்பவம் மிகவும் கொடூரமானது. இந்த இரக்கமற்ற மிருகச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி அரசியல் கட்சியின் பிரமுகர், உள்ளாட்சி பிரதிநிநி என்ற அடையாளத்துடனும், பணத்திமிருடன் நடந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு மாத காலம் ஒரு சிறுமி சித்திரவதை செய்யப்பட்டதில் இரண்டு பெண்களும் உடன் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி, சமூக ஒழுக்கம் சீரழிந்து வருவதன் அடையாளமாகும்.