குத்தாலம் அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

குத்தாலம்: குத்தாலம் அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் தொழுதாலங்குடியில் ஊராட்சியில் உள்ள பொன்னியம்மன்கோவில் ஆர்ச்சிலிருந்து பள்ளிக்கூடம் வரையிலான தார் சாலையை ஜல்லி கற்கள் பெயர்ந்து மிகுந்த அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் சாலையில் தாழ்வான பல பள்ளம் மேடுகளும் காணப்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இந்த சாலை பயணம் மிகுந்த அளவில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. சாலையில் அரிமானம் ஏற்பட்டு உள்ளதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகளுக்கு செல்லவும் விவசாயிகள் தங்களுக்கான பணிகளை மேற்கொள்ளவும். இந்த சாலை பிரதான சாலை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை புதிதாக அமைத்து தர இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: