சென்னை: ஏப்ரல்-பிப்ரவரி 2023 காலகட்டத்தில், பயணிகளின் வழியாக ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்: தெற்கு ரயில்வேயானது பயணிகள் மற்றும் சரக்கு பிரிவில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2022-23ம் நிதியாண்டில் ஏப்ரல்-பிப்ரவரி 2023 காலகட்டத்தில், 3 கோடியே 39 லட்சம் டன்கள், உற்பத்தி சரக்குகளை கொண்டு சேர்த்ததில் ரூ.3,230.40 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல்-பிப்ரவரி 2023 வரை சரக்கு ரயில் போக்குவரத்தில் ரூ.3,230.40 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. தெற்கு ரயில்வே, பயணிகளின் தோழமை மண்டலமாக செயல்பட்டு வருகிறது.