சென்னை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப் படுவதாக வதந்தி பரப்புவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தியை கிளப்பி உள்ளனர். கொரோனா தொற்று நோயில் இருந்து மீண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முயற்சியால் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இது மாநிலங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உள்ளது.