சிறுதானிய லட்டு பிரசாதம் காசி கோயில் நிர்வாகம் முடிவு: 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் சிறுதானிய லட்டு பிரசாதம் காசி கோயில்,பிரதமர் மோடிக்கு கடிதம்...

லக்னோ: காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்களுக்கு சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்தியாவின் பரிந்துரையைை ஏற்று 2023ஐ சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளது. சிறுதானிய உணவை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பக்தர்களுக்கு சிறு தானியங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதம்  வழங்க காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.  இதுகுறித்து,அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ கோயிலில் வினியோகிக்கப்படும் சிறுதானிய லட்டு இனி அன்ன பிரசாதம் என அழைக்கப்படும். பெண்கள் சுய உதவி குழுவை சேர்ந்தவர்கள்  அன்ன பிரசாதத்தை தயாரிக்கின்றனர். ’’ என்றார்.

ஆகியோர் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணையின் கீழ் இருந்தனர். ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் பாஜவில் இணைந்த பிறகு வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.   தவிர்த்து விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவது ஏன் என்பது  புரியவில்லை. இதேப்போன்று  இந்திய ஜனநாயகத்தில் ஆளுநர்களின் பங்கு என்ன என்று இந்திய மக்கள் இப்போது கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். கவர்னர்  அலுவலகங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மாநில அரசு நிர்வாகத்தில் கவர்னர்கள் தலையிடுகின்றனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலங்கானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கவர்னர்கள் அரசியலமைப்பு விதிகளை மீறுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பது மட்டுமில்லாமல் நமது ஜனநாயகத்திற்கும் நல்லது கிடையாது. ஜனநாயக நாட்டில் மக்களின் விருப்பமே உயர்ந்தது என்பதை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: