நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து..!!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது. மல்லிகா என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. மாநகராட்சி ஆணையர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சேலம் ஆண்டிபட்டி கிராமத்தில் தனது வீட்டை இடைத்து மாநகராட்சி சார்பில் பொதுச்சாலை அமைத்ததாக மல்லிகா வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related Stories: