சென்னை: வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புபவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். வதந்தி பரப்புவோர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்றும் புலம்பெயர் தொழிலாளர்களை வைத்து சிலர் கீழ்த்தரமாக அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.