சென்னை: சென்னை உயர் நீதிமன்ற ஆவின் கேட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர்கள், ஆளுநருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முழுக்கமிட்டனர். இதையடுத்து வழக்கறிஞர் விஜயகுமார் கூறும்போது, ‘இந்திய நாட்டில் ஆளுநர் பதவியேற்கும் மாநிலத்தில் உள்ள மக்களின் உரிமைகளை ஆளுநர் பாதுகாக்க வேண்டும். அவர்களிடம் மூட பழக்க வழக்க கருத்துகளை பரப்பக்கூடாது. ஆனால், தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். ஜாதி வெறியை தூண்டும் சனாதன கொள்கையை ஆளுநர் ரவி பிரசாரம் செய்து வருகிறார்.