தனியார் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் அகவிலைப்படி, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து ஆண்டுகள் நீடிக்கின்றன. அரசு அறிவித்த புதிய திட்டங்கள் பயனளிக்கும் என்றாலும், அதனை விட மிக முக்கியமாக ஆசிரியர்கள் ஏற்கனவே விடுத்த கோரிக்கைகள் தான் மிக மிக அவசியமானது. எனவே தமிழக அரசு, முதலில் ஆசிரியர்கள் ஏற்கனவே விடுத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் வருங்கால வாழ்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Related Stories: