ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 50,000க்கும் அதிகமானோரை காவு வாங்கியது. துருக்கி, சிரியாவில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நாடுகள் துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. துருக்கி, சிரியாவைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், ஜப்பான் மற்றும் நமது நாட்டின் பல பகுதிகளில் தொடர் நிலநடுக்கம் உணரப்படுகிறது. இந்நிலையில் இன்று இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
