செம்பனார்கோயில்: செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூட்ம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நெல்கொள்முதல் செய்யப்பட்டதால் விசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் மறைமுக ஏல முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்றும் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செம்பனார்கோயில் அருகே மாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் சுமார் 580 மூட்டை நெல் சுமார் ரூ.6.50 லட்சத்துக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது.