சென்னை: “வெளியுறவுக் கொள்கையிலும் Failure Model எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
