சென்னை:சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பரூக் அப்துல்லா பேசினார்.திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று சந்தித்து பேசினார்.அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், கூட்டணி கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு , எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜே.எம்.ஆரூண் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.