பாஜக பெண் பிரமுகர் கணவரிடம் தகராறு ஆர்.கே.நகர் காவல்நிலைய போலீஸ்காரர் 2 பேர் சஸ்பெண்ட்: வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அதிரடி

தண்டையார்பேட்டை: பாஜக பெண் பிரமுகரின் கணவரிடம் தகராறில் ஈடுபட்ட ஆர்.கே.நகர் காவல்நிலைய போலீஸ்காரர்கள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் பாலாஜி (32), பரித்ராஜா  (29). இவர்கள், கடந்த 28ம் தேதி ரோந்து பணியில் இருந்தபோது, கொருக்குப்பேட்டை-மணலி சாலை பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் தேவி என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தேவியின் கணவர், நள்ளிரவு நேரத்தில் குடிபோதையில் எதற்கு இங்கு வந்தீர்கள் என கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தேவியின் கணவர் வீடியோ எடுத்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையரிடம் காண்பித்து புகார் செய்துள்ளார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார்ரெட்டி விசாரணை  நடத்தியதில், போலீஸ்காரர்கள் இருவரும் குடிபோதையில்  தகராறில் ஈடுபட்டது  தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவலர்கள் பாலாஜி, பரித்ராஜா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து  துணை ஆணையர் உத்தரவிட்டார். காவலர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்த சம்பவம் சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: