தண்டையார்பேட்டை: பாஜக பெண் பிரமுகரின் கணவரிடம் தகராறில் ஈடுபட்ட ஆர்.கே.நகர் காவல்நிலைய போலீஸ்காரர்கள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் பாலாஜி (32), பரித்ராஜா (29). இவர்கள், கடந்த 28ம் தேதி ரோந்து பணியில் இருந்தபோது, கொருக்குப்பேட்டை-மணலி சாலை பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் தேவி என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தேவியின் கணவர், நள்ளிரவு நேரத்தில் குடிபோதையில் எதற்கு இங்கு வந்தீர்கள் என கேட்டுள்ளார்.