தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை நம்மையாமேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (57). இவருக்கு அதே பகுதியில் பருப்பு குடோன் உள்ளது. பருப்பு குடோனில் பத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த பருப்பு குடோனுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் பருப்பு வாங்கி செல்வார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை குடோனில் இருந்து கரும் புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.