அண்ணாநகர்: ஆசியாவில் மிகப்பெரிய சந்தையாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழம், பூ மற்றும் உணவுதானியம் ஆகிய மார்க்கெட்டுகள் செயல்படுகிறது. இங்கு தினமும் லட்சக்கணக்கில் மக்கள் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இதன்காரணமாக அதிக பணப்புழக்கம் உள்ள இந்த பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து வழிப்பறி, செயின், செல்போன் பறிப்பு, பைக் திருட்டு மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது போன்றவை நடைபெற்று வருகிறது. இந்த குற்றச் சம்பவங்களை தடுக்கவும் வியாபாரிகளுக்குள் தகராறு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் மார்க்கெட் வளாகத்தில் சென்னை புறநகர் காவல் நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் புறநகர் காவல் நிலையம் இருந்தும் அங்கு பணி செய்ய போலீசார் இருப்பதில்லை என்று வியாபாரிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது;
கோயம்பேடு மார்க்கெட்டில் செல்போன், செயின் பறிப்பு, வழிப்பறி, பைக் திருட்டு, பிக்பாக்கெட் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதை தொடர்ந்து மார்க்கெட்டில் காவல்நிலையம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதன்படி புறநகர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது.