சென்னை: வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல்முறையாக மல்லிகார்ஜுன கார்கே சென்னை வருகை தந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய பல தலைவர்கள் விரும்புவதாகவும் கூறினார். செய்தியாளர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டியில், வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.