ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 45,314 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 9வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 45,314 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 70,299 வாக்குகளும், தென்னரசு 24,985 வாக்குகளும் பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் 67,300 வாக்குகள் பெற்று வென்ற நிலையில் தற்போது 9வது சுற்றிலேயே இளங்கோவன் 70,000 வாக்குகளை கடந்துள்ளார்.

Related Stories: