திருச்சி: பறவை மோதியதால் விமான இன்ஜின் பழுதானது. இதனால் 220 பயணிகள் அவதிப்பட்டனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு வரவேண்டிய ஏர்ஏசியா விமானம் 2 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 2 மணிக்கு வந்தது. அங்கு காத்திருந்த 220 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் மீண்டும் 4 மணிக்கு கோலாலம்பூர புறப்பட தயாரானது.