சென்னை: சென்னை புழல் கண்ணப்ப சாமி நகர் 15வது தெருவை சேர்ந்தவர் ரவி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி சாந்தி (51). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சாந்தி வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், திண்டிவனம் அடுத்த நெற்குன்றம் கிராமத்தில் தனது கணவருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்துள்ளார். இந்த பணத்தில் புழல், காவாங்கரை, கண்ணப்ப சாமி நகர் ஆகிய பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தை வாங்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அப்போது, கண்ணப்ப சாமி நகரை சேர்ந்த பாஜ பிரமுகரும், ரியல் எஸ்டேட் அதிபருமான குமார் (50) என்பவரிடம் ரூ.20 லட்சம் கொடுத்து நிலம் வாங்கி தருமாறு கூறியுள்ளார்.