சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு பணியால் நாளை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மண்டலம்-6 வில்லிவாக்கம் ஜேபிஐசி கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது. எனவே, மண்டலம்-3, 6, 7 மற்றும் 8-க்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறினால் அவசர தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.