சென்னை: விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் புதிய நியாயவிலைக் கடை திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில் சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, உலகப்ப தெருவில் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.21.44 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையினை விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.