திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை: விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் புதிய நியாயவிலைக் கடை திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில் சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, உலகப்ப தெருவில்  திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.21.44 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையினை விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும்,  5 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களும் மற்றும் 5 புதிய குடும்ப அட்டைகளும் வழங்கினார். திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இந்த நியாயவிலைக்கடைக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அத்தயாவசிய பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 687 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 26 சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: