எல்பிஜி தகன மேடை பணிக்காக குன்றுமேடு மயான பூமி 2 மாதங்கள் இயங்காது

சென்னை: சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு-156க்குட்பட்ட குன்றுமேடு மயான பூமியின் எரிவாயு தகன மேடையை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், திரவ பெட்ரோலிய வாயு (எல்பிஜி) தகன மேடையாக மாற்றம் செய்யவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும், வரும் 3ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை 2 மாத காலங்களுக்கு இந்த மயான பூமியில் உடல்களை தகனம் செய்ய இயலாது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் 2 மாதங்களுக்கு உடல்களை எரியூட்டுவதற்கு பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-150க்குட்பட்ட போரூர் மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: