ஆலந்தூர் குன்றுமேடு மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 2 மாதம் உடல்களை தகனம் செய்ய இயலாது: சென்னை மாநகராட்சி

சென்னை: ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட குன்றுமேடு மயானபூமியில்  மேம்பாட்டு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் போரூர் மயானபூமியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு-156க்குட்பட்ட குன்றுமேடு மயானபூமியின் எரிவாயு தகனமேடையை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் திரவ பெட்ரோலிய வாயு (LPG) தகனமேடையாக மாற்றம் செய்யவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் பணிகள் நடைபெற உள்ளதால், 03.03.2023 முதல் 02.05.2023 வரை இண்டு மாத காலங்களுக்கு மேற்கண்ட மயானபூமியில் உடல்களை தகனம் செய்ய இயலாது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் 03.03.2023 முதல் 02.05.2023 வரையிலான நாட்களுக்கு உடல்களை எரியூட்டுவதற்கு பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-150க்குட்பட்ட போரூர் மயானபூமிகயைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Stories: