மதுராந்தகம்: சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் டிரைவரும் கண்டக்டரும் உயிர் தப்பினர். கோவையில் இருந்து சென்னையை நோக்கி இன்று அதிகாலை ஆம்னி பஸ் சென்றது. அந்த பஸ்சில் பயணிகள் ஒருவர் கூட இல்லாமல் டிரைவரும் கண்டக்டர் மட்டுமே சென்றுள்ளனர். இந்த பஸ், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில் உள்ள மேலவளம்பேட்டை பகுதியில் வரும்போது இன்ஜின் பகுதியில் கரும்புகை வந்த சிறிது நேரத்த்தில் தீப்பிடித்து எரிந்தது.