திருவொற்றியூர்: திருவொற்றியூரில் குடிபோதையில் தகராறு செய்த கணவரை பெண் போலீஸ் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் மணிவாணன் (33). இவர் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். அதே தெருவைச் சேர்ந்தவர் மருதாயி (27). இவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய முதல் கணவர் கடந்த 2017ம் ஆண்டு விபத்தில் இறந்துவிட்டார். பின்பு கடந்த 2022ம் ஆண்டு, வக்கீல் மணிவாணனை மருதாயி 2வது திருமணம் செய்தார். திருவொற்றியூரில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் தம்பதியர் வசித்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மருதாயி கணக்கர் தெருவில் உள்ள தன் சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக வக்கீல் மணிவாணன் குடித்துவிட்டு போதையில் மருதாயி வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளார்.