புதுடெல்லி: மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்கள் தேவை என்பதனை நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகள் உணர்த்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அதிரடியாக கருத்து தெரிவித்து பேசியுள்ளார். டெல்லியில் நடந்த ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிக்கான மருந்து, சுகாதாரத்தில் நியாயம் மற்றும் சமத்துவத்திற்கான தேடுதல் என்ற தலைமையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நீட் தொடர்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் முடிவுகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் எனது அமர்விலேயே நிலுவையில் இருந்து வருகிறது. இருப்பினும் நீதிமன்றங்கள் அரசின் கொள்கைக் களத்தில் நுழைய முடியாது. இதில் முக்கியமாக இதுபோன்ற நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நம்பிக்கையையும், கருத்துகளையும் கேட்பது அரசின் கடமையாகும். இருப்பினும்