திருவள்ளூர்: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், மூலமாக பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக டாப்செட்கோ 2022-2023 நிதி ஆண்டில் ரூ.300 லட்சம் மற்றும் டாம்கோ 2022-2023 நிதி ஆண்டிற்கு ரூ.185 லட்சம் கடனுதவி வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நடைபெறவுள்ளது.